வயானா நெட்வொர்க் மற்றும் ஃபெடரல் வங்கி ஆகியவற்றிற்கு 2021 ஆம் ஆண்டு IBSi – உலக நிதித் தொழில்நுட்பப் புத்தாக்க விருது வழங்கும் விழாவில் ‘மிகவும் செயல் திறன் மிக்க நிதித் தொழில்நுட்பக் கூட்டாண்மை வங்கி : திறன்மிக்கது மற்றும் தகவமைவு மிக்கது’ என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.
வழங்கீட்டுத் தொடரமைவு நிதியியலை (Supply Chain Finance) தானியங்கு மயமாக்கி எளிமைப்படுத்தியதற்காக இந்த விருதானது அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம்வென்ற இந்தியப் பேட்மிண்டன் வீராங்கனையான P.V. சிந்து பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பின் தடகள வீரர்கள் ஆணையத்தின் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
2025 ஆம் ஆண்டு வரை இந்த ஆணையத்தின் உறுப்பினராகப் பணியாற்ற உள்ள 5 உறுப்பினர்களுள் ஒருவராக 26 வயதான இந்த முன்னாள் உலக சாம்பியன் நியமிக்கப் பட்டார்.
8வது உலகத் தமிழ் மாநாடு மற்றும் சென்னை உலகப் பொருளாதார உச்சி மாநாடு டிசம்பர் 27 முதல் 29 வரை சென்னையில் நடத்தப் பட்டது.
இதில் உலகம் முழுவதுமிருந்து 10 தலைசிறந்த தமிழர்களுக்கு “உலகத் தமிழர்களின் மணி மகுடம்” என்ற விருது வழங்கப்படவும் உள்ளது.
35 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீநகரில் உள்ள 126 வருடங்கள் பழமையான புனித லூக் தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டது.