இந்தியாவில் விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் சார்ந்த அமைப்பானது (PETA - People for the Ethical Treatment of Animals), பாலிவுட் நடிகை ஆலியா பட்டினை 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச அரசானது ஜான்சி இரயில்வே நிலையத்தின் பெயரை ‘வீராங்கனை லட்சுமிபாய் இரயில் நிலையம்‘ என மாற்றியுள்ளது.
ஜான்சி இரயில் நிலையத்தின் இந்தப் புதிய பெயரானது ராணி லட்சுமி பாயின் நினைவாக பெயரிடுவதற்கு வேண்டி முடிவு செய்யப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கீசியக் கால்பந்தாட்ட ஜாம்பாவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பவரின் உருவச் சிலையானது கோவாவிலுள்ள பனாஜி எனுமிடத்தில் நிறுவப் பட்டு உள்ளது.
இளையத் தலைமுறையினரிடையே விளையாட்டுத் துறையில் அவர்களைப் பங்கேற்க ஊக்குவிப்பதும் அவர்களின் கனவைப் பின்பற்ற செய்வதும் இதற்கான ஒரு நோக்கமாகும்.