TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 30 , 2022 938 days 492 0
  • ஐக்கிய நாடுகள் அவையின் 2022 ஆம் ஆண்டிற்கான ஒரு வழக்கமான நிதி நிலை அறிக்கை மதிப்பீட்டில் இந்தியா 29.9 மில்லியன் டாலர் தொகையைச் செலுத்தியுள்ளது.
    • இந்தியா தற்போது 15 உறுப்பினர் நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினராக, அதன் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நிறைவடைகிற நிலையில், உள்ளது.
  • ஜம்மு & காஷ்மீரின் காவல் துறையின் 115 காவலர்களுக்கு, இந்த ஆண்டில் எந்தவொரு மாநிலக் காவல்துறைக்கும் வழங்கப் பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான ஒரு அளவில், வீரதீரப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
    • இதனைத் தொடர்ந்து மத்திய சேமக் காவற்படை (30), சத்தீஸ்கர் காவல்துறை (10), ஒடிசா காவல்துறை (9) மற்றும் மகாராஷ்டிரா காவல்துறை (7) ஆகியவை உள்ளன.
  • இந்தியா-மத்திய ஆசியா உச்சி மாநாட்டின் முதல் சந்திப்பினைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
    • இந்தச் சந்திப்பில் கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாட்டின் அதிபர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்