உலகின் மிகப்பெரிய விரைவுப் போக்குவரத்து நிறுவனமான FedEx நிறுவனம் தனது புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய அமெரிக்கரான ராஜ் சுப்ரமணியம் என்பவரை நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனமானதுஇதற்கு முன்பு ஃபிரடெரிக் W ஸ்மித் என்பவரின் தலைமையில் இருந்தது.
டொராண்டோ நகரில் நடைபெற்ற போட்டியில் ஜமைக்கா அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 36 ஆண்டுகளில் முதல் முறையாக கத்தார் நாட்டில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டின் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்கு கனடா தகுதி பெற்று உள்ளது.
2022 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பைக்குத்தகுதி பெறும் 20வது அணியாக கனடா அணி மாறியது.
உலகம் முழுவதும் உள்ள மக்களில் பெரும்பாலானோரைப் பாதிக்கும் மனநலக் கோளாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக வேண்டி மார்ச் 30 ஆம் தேதியன்று உலக இருமுனை (இரு துருவம்) தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு உலக இருமுனைத் தினத்தின் கருத்துரு, #BipolarTogether என்பதாகும்.
உலக காப்புத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
தொழில்நுட்பத்தை நாம் அதிகம் சார்ந்து இருப்பதால், நமது விலை மதிப்பற்ற டிஜிட்டல் (எண்ணிம) ஆவணங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை இந்த தினம் நமக்கு நினைவூட்டுகிறது.
சர்வதேச போதைப்பொருள் பரிசோதனைத் தினமானது 2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்தத் தினமானது மருந்துகளின் தீங்கு குறைப்பு முயற்சிகளை ஊக்குவிப்பது மற்றும் போதைப் பொருள் தொடர்பான அபாயங்களைக் குறைக்கச் செய்வது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காட்டு விலங்குகளுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கிய உலகின் முதல் நாடாக தென் அமெரிக்க நாடான ஈக்வடார் மாறியுள்ளது.