TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 4 , 2022 841 days 405 0
  • இந்தியப் பெருங்கடல் கடற்படைக் கருத்தரங்கின் (IONS) முதலாவது கடல்சார் பயிற்சி 2022 என்பது கோவா மற்றும் அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் நடத்தப் பட்டது.
    • மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் உறுப்பினர் நாடுகளுடைய  கடற்படைகளின் இயங்குந் தன்மையை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் ஒரு நோக்கமாகும்.
  • மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அறிவித்துள்ளது.
    • கோவிட்-19 பெருந்தொற்று நிலைமையில் ஏற்பட்டுள்ள நிலையான சரிவைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதம் முதல் இந்த கோவிட்-19 விதிமுறைகளை முழுமையாக தளர்த்துவதாக இந்த மாநிலங்கள் அறிவித்துள்ளன.
  • சாம்சங் டேட்டா சிஸ்டம் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அபிடெக் ஐடி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் மணிப்பூர் மாநில அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
    • இது மணிப்பூர் ஒலிம்பியன் பூங்கா மற்றும் குமான் லம்பக் விளையாட்டு வளாகத்தின் களமாக ஒரு உலகத் தரம் வாய்ந்த “விளையாட்டு ரீதியான டிஜிட்டல் (எண்ணிம)  அனுபவத்தை வழங்கக் கூடிய ஒரு மையத்தை” அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்