பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய நபர்களுக்கான பிரதமர் மந்திரியின் விருதுகளை புது டெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
குடிமைப் பணி தினத்தை (ஏப்ரல் 21) முன்னிட்டு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தின் 4 மண்டலங்களில் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்களை நிறுவுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சட்ட சபையில் 110வது விதியின் கீழ் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான இந்தியப் பிரீமியர் லீக் போட்டியானது 2023 ஆம் ஆண்டில் தொடங்க உள்ளது.
தொடக்கப் போட்டித் தொடரில், முகமை அடிப்படையிலான அமைப்பான இந்தப் போட்டியானது, 6 அணிகளைக் கொண்டிருக்கும்.
ப்ராக்டர் & கேம்பிள் என்ற இந்திய நிறுவனமானது, இந்தோனேசியாவில் அதன் வணிகத்தினை மேற்கொண்டு வழி நடத்திய L.V. வைத்தியநாதன் என்பவரை தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.
இதன் தாய் நிறுவனத்தின் ஒரு புதியப் பொறுப்பினை மதுசூதன் கோபாலன் என்பவர் ஏற்க உள்ளதால், அவரையடுத்து வைத்தியநாதன் இந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார்.
டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனமானது, ஜஸ்லீன் கோலி என்பவரைத் தனது புதிய மேலாண்மை இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமித்துள்ளது.
இவர் விஜய் குமார் என்பவரையடுத்து இப்பதவியினை ஏற்றுள்ளார்.