ஆசிய ஆப்பிரிக்கக் கூட்டமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய சர்வதேச மாநாட்டில், தொழிலதிபர் பபிதா சிங் உலக அமைதித் தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.
கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம் மற்றும் இராஜதந்திரம் ஆகியவை மூலம் அமைதியை மேம்படுத்தியதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று, உலகில் இரண்டாவது அதிகம் பேசப் படும் மொழியான ஸ்பானிய மொழியைக் கொண்டாடும் விதமாக ஸ்பானிய மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
மிகவும் புகழ்பெற்ற ஒரு ஸ்பானிய எழுத்தாளரான மிகுவல் டி செர்வாண்டஸ் சாவேத்ராவை (Miguel De Cervantes Saavedra) கௌரவிக்கும் விதமாகவும் இத்தினம் கொண்டாடப் படுகிறது.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், குஜராத்தின் வடோதரா அருகே உள்ள ஹலோல் எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஏற்றுமதியை மையமாகக் கொண்டு நிறுவப்பட்ட JCB நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையைத் திறந்து வைத்தார்.
இந்தத் தொழிற்சாலை உலகளாவிய உற்பத்திகளுக்கான பாகங்களை தயாரிக்கச் செய்யும்.