ஒரு சமூக வலை தளமான ட்விட்டர் (கீச்சகம்) மீதான கட்டுப்பாட்டை எலோன் மஸ்க் கைப்பற்றியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அவர் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கி இந்த சமூக வலைதளத்தினைக் கைப்பற்ற உள்ளார்.
டெல்லி மற்றும் பஞ்சாப் அரசுகள் ஒரு தனித்துவமிக்க தகவல் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த இரு மாநில அரசுகளும் ஒவ்வொன்றிடமிருந்தும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு மேலும் முன்னேறுவதற்கான தகவல்களை பகிர்ந்து கொள்ளச் செய்வதற்காக வேண்டி இந்த ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளன.
உலகின் மிகவும் வயதான நபராக கருதப்படும் ஜப்பானியப் பெண் கேன் டனகா தனது 119வது வயதில் காலமானார்.
இவர் ஜப்பானின் ஃபுகுவோகா பகுதியில் பிறந்தவர் ஆவார்.