TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 23 , 2022 791 days 381 0
  • ப்ரீத்தி ஷெனாய் “A Place Called Home” என்ற புதிய நாவலை வெளியிட உள்ளார்.
    • இந்தப் புதிய நாவல் ‘இரகசியங்கள், குடும்பம் மற்றும் சுய தேடல்’ ஆகியவற்றைப் பற்றியது ஆகும்.
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், லடாக்கின் லே நகரில் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கழக (NIELIT) மையத்தைத் திறந்து வைத்தார்.
  • பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வாரியமானது கோபால் விட்டல் என்பவரை, அதன் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக மேலும் ஐந்து ஆண்டுக் காலத்திற்கு மீண்டும் நியமித்துள்ளது.
  • டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் தனது பதவி விலகல் கடிதத்தினை ஒப்படைத்தார்.
  • பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் உணவுப் பிரிவினை, சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ருச்சி சோயா கையகப்படுத்த உள்ளது.
  • பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், 'Civil List – 2022 of IAS officers' என்ற புதிய இணையப் புத்தகத்தினை வெளியிட்டார்.
  • துருக்கியில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன் வெற்றி பெற்று உள்ளார்.
    • இவர் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற ஐந்தாவது இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்