தி குளோபல் மெர்சி எனப்படும் உலகின் மிகப்பெரிய பொது மருத்துவமனைக் கப்பல் செனகலில் உள்ள டக்கார் துறைமுகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜகார்த்தா நகரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியினை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இதன் இறுதி ஆட்டத்தில் மலேசியாவைத் தோற்கடித்து தென் கொரிய நாடானது தனது 5வது பட்டத்தை வென்றது.
மெட்டா நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக இரண்டாவது உயர் தரவரிசை நிர்வாகியாக விளங்கி வந்த அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க் அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி உலகளாவிய அளவில் கல்விக்கானச்செயலி ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, கிரிக்கெட்டில் அவர் ஆற்றியச் சேவைகளுக்காக குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலி என்ற விருதுகள் பட்டியலில் இடம் பெற்றதையடுத்து, ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர் என்ற விருதினைப் பெற்றார்.