மாநிலத்தில் உள்ள வளமான நிலங்களை பாலைவனமாக்கும் சில நடவடிக்கைகளை நிறுத்தி, அவற்றை மாற்றியமைப்பதன் மூலம் மண்ணைக் காப்பாற்றுவதற்காக ராஜஸ்தான் அரசானது ஈஷா அவுட்ரீச் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
குஜராத்தை அடுத்து, இந்த அறக்கட்டளையுடன் இத்தகையப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டாவது இந்திய மாநிலமாக ராஜஸ்தான் மாறியுள்ளது.
இன்ஸ்டாகிராம் ஊடகத்தில் 200 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் இந்தியர் என்றப் பெருமையை இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெற்றார்.
வாட்ஸப் நிறுவனமானது, வாட்ஸப் வணிக செயலி போன்ற டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்த உதவுவதன் மூலம் சிறு வணிகங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள SMBSaathi Utsav என்ற ஒரு முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியது.
நிர்மலா சீதாராமன் அவர்கள் பொதுத்துறை வங்கிகளுக்கான EASE 5.0 (மேம்படுத்தப் பட்ட அணுகல் மற்றும் சிறப்புச் சேவை) ‘பொதுச் சீர்திருத்தச் செயல்பாட்டு நிரலை’ வெளியிட்டார்.
மும்பையில் உள்ள சர்வதேச விளையாட்டு மற்றும் மேலாண்மை நிறுவனமானது (IISM), வினித் கர்னிக் எழுதிய “Business of Sports: The Winning Formula for Success” என்ற தலைப்பிலான விளையாட்டுத் துறையில் சந்தைப்படுத்துதல் குறித்த இந்தியாவின் முதல் புத்தகத்தை வெளியிட்டது.
மாருதி சுஸுகி இந்தியா ஹரியானாவில் உள்ள மனேசரில் அமைந்துள்ள தனது உற்பத்தி அலகில் 20 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தியினால் இயங்கும் கார் நிறுத்தத்தினை நிறுவியுள்ளது.
பிசினஸ் இதழின் ஒரு அறிக்கையின்படி, இது ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்தியினால் இயங்கும் ஒரு கார் நிறுத்தம் ஆகும்.
2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய BPM (வணிக செயல்முறை மேலாண்மை) சேவை வழங்கீட்டு நிறுவனங்கள் பட்டியலில் TCS நிறுவனம் தனது பத்தாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.