பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கியா என்ற நிறுவனத்தின் நாகச்சந்திரா காணகத்தினை (ஷோரூம்) கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.
ஹைதராபாத் மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக பெங்களூருவில் அமைக்கப் பட்டுள்ள இந்தக் கடையானது இந்தியாவில் அமைந்துள்ள ஐக்கியா நிறுவனத்தின் மூன்றாவது விற்பனை நிலையமாகும்.
ONGC விதேஷ் லிமிடெட் நிறுவனமானது, கொலம்பியாவில் உள்ள உர்ராக்கா என்ற துளையிடப்பட்ட கிணற்றில் எண்ணெய் இருப்பதைச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது.
மத்தியப் புலனாய்வு வாரியத்தின் புதிய தலைவராக தபன் டேகா நியமிக்கப் பட்டு உள்ளார்.
இவரது நியமனமானது அமைச்சரவையின் நியமனக் குழுவால் அங்கீகரிக்கப் பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் S.S.முந்த்ராவைப் பங்குச் சந்தை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக நியமிப்பதற்குப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.