இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற கிரேக்க-ரோமன் 17 வயதிற்கு உட்பட்ட நபர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில், கடந்த 32 ஆண்டுகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சூரஜ் வசிஷ்ட் பெற்றார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஆனது, தற்போது விடைபெற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது முன்னோடிகளின் சில அரிய புகைப்படங்களைக் காட்சிப்படுத்தும் மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் நடத்தப்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கும் Paytm நிறுவனத்திற்குப் பதிலாக இனி மாஸ்டர்கார்டு நிறுவனம் நிதி வழங்கீட்டு நிறுவனமாகச் செயல்படும்.
இந்திய ரிசர்வ் வங்கியானது, பொது வைப்புத்தொகையை ஏற்காமல், வங்கி சாராத நிதி நிறுவனத்தின் (NBFC) வணிகத்தைத் தொடங்குவதற்கு பிரமல் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் ஒரே மாதத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதங்களை 75 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தியது.
இது வட்டி விகிதத்தைச் சுழியம் என்ற நிலையில் இருந்து 2.25 சதவிகிதம் முதல் 2.5 சதவிகிதம் வரையிலான வரம்பு வரையில் உயர்த்தியுள்ளது.