மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஆகியவை இணைந்து, அந்த நிறுவனத்தின் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து, கிட்டத்தட்ட 2.5 மில்லியன் அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு திட்டத்தினை இணைந்துச் செயல்படுத்திட ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.
லாத்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகள் சீனா மற்றும் 12 மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு ஒத்துழைப்புக் குழுவிலிருந்து விலகியுள்ளன.
தைவான் மீதான ராணுவ நெருக்கடியினை அதிகரிப்பது தொடர்பாக மேற்கத்திய நாடுகள் சீனா மீது வீசிய விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.