விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில், கிரிக்கெட் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் தலா 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் மற்றும் இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இத்தகையச் சாதனையைப் படைத்த முதல் மனிதர் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் ஆவார்.
இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவர் ரோஹித் சர்மா, நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டிலை முந்தி, டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர் என்ற ஒரு பெருமையைப் பெற்றார்.
விராட் கோலி ஆடவர் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன் குவித்த மூன்றாவது வீரர் ஆவார்.