TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 13 , 2018 2228 days 705 0
  • மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராக அரவிந்த் சக்ஸேனா நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 19ஆம் தேதி தன்னுடைய பதவிக் காலத்தை பூர்த்தி செய்கின்ற UPSCன் தற்போதைய தலைவரான வினய் மிட்டலுக்கு அடுத்து UPSC உறுப்பினரான சக்ஸேனா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைவரான V.சௌத்ரி தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான M.பாசின் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்நியமனங்களானது நியமிக்கப்பட்டோர் அப்பதவியினை பணிபுரிய தொடங்கும் நாளிலிருந்து நான்காண்டு காலத்திற்கு மேற்கொள்ளப்பட்டு உள்ளது அல்லது அவர்கள் 65 வயதினை அடையும் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்