TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 22 , 2022 669 days 370 0
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான T. ராஜாவை செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அந்த நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாக மத்திய அரசு நியமித்தது.
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்திற்குச் சென்று, தனது சார்பாகவும் இந்திய மக்களின் சார்பாகவும் மறைந்த இராணிக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • அங்கு இரங்கல் புத்தகத்திலும் அவர் கையெழுத்திட்டார்.
  • கொல்கத்தாவில் நடைபெற்ற துராந்த் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டியில் பெங்களூரு FC அணியானது முதலாவது முறையாக மும்பை சிட்டி FC அணியினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • உலக இளையோர் சதுரங்கச் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பிரணவ் ஆனந்த் மற்றும் A.R. இளம்பரிதி, முறையே 16 வயதுக்குட்பட்டோருக்கான மற்றும் 14 வயதுக்குட்பட்டோருக்கான ஓபன் பிரிவுகளில் பட்டங்களை வென்றனர்.
  • தெலுங்கானா அரசானது தனது புதியச் செயலகத்திற்கு டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்