புற்றுநோயாளிகளின் நலனுக்கானத் தினம் என்றும் அழைக்கப்படும் உலக ரோஜா தினமானது செப்டம்பர் 12 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
மொராக்கோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலகத் தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரரான தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
மூன்றாவது LEADS சந்திப்பானது, "எதிர்காலத்திற்கானத் தலைமை" என்ற தலைப்பில் புது டெல்லியில் நடத்தப் பட்டது.
ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்திற்கான இந்தியாவின் தலைமைப் பதவியாமானது மேலும் ஓர் ஆண்டிற்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
SAFF மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் வங்காளதேச மகளிர் கால்பந்து அணி தனது முதல் பட்டத்தை வென்றது.
நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அந்த அணி நேபாள அணியினை வென்றது.
குஜராத்திய மொழித் திரைப்படமான "செல்லோ ஷோ" 95வது அகாடமி விருதுகள் அல்லது ஆஸ்கார் விருதுகளுக்காக இந்தியா சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் தர்காஷ் கப்பல் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக கினியா வளைகுடாப் பகுதியில் ரோந்துப் பணிக்காக அனுப்பப் பட்டுள்ளது.