மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்குக் கர்நாடகாவின் உயரியக் குடிமை விருதான 'கர்நாடக ரத்னா' விருதானது அவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய இளையோர் ஆடவர் ஹாக்கி அணியானது ஆஸ்திரேலிய அணியினை வீழ்த்தி 2022 ஆம் ஆண்டு சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்றது.
அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு, கல்வி அமைச்சகம் மற்றும் FIFA ஆகியவை பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டி வசதி வழங்கல் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள பல்வேறு பள்ளிகளில் கால்பந்து போட்டிகளை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்திய கடற்படைத் தளபதிகள் மாநாடானது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, இந்தியாவில் சுகாதாரக் காப்பீட்டைப் பொது மயமாக்கும் நோக்கத்தை அடைவதற்காக ராகேஷ் ஜோஷியின் தலைமையின் கீழ் 15 பேர் கொண்ட குழு ஒன்றினை இரண்டு ஆண்டு காலத்திற்கு அமைத்துள்ளது.
பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்படும் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்குப் புதிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சமயத்தில், உலகளவில் நிலவும் தீவிரவாதத்தினை எதிர்ப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளுக்கு இந்தியா அரை மில்லியன் டாலர் நிதியினை வழங்க உள்ளது.