TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 25 , 2023 484 days 257 0
  • பட்டு வளர்ப்பு விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக ரேஷம் கீத் பீமா என்ற காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் மாறியுள்ளது.
  • ஸ்ரீநகரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டமான இந்திரா காந்தி நினைவு துலிப் மலர் தோட்டம் சமீபத்தில் திறக்கப்பட்டது.
    • இந்த தோட்டம் 1.5 மில்லியன் (15 லட்சம்) வகை  மற்றும் வண்ண துலிப் மலர்களைக்  கொண்டுள்ளது.
  • புதுடெல்லியில் நடைபெற்ற உலக சிறு தானியங்கள் (ஸ்ரீஅன்னா) மாநாட்டினைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • சீனாவிற்கும் அருணாச்சலப் பிரதேசத்திற்கும் இடையிலான சர்வதேச எல்லையாக மெக்மோகன் கோட்டினை அங்கீகரிப்பதற்கான ஒரு தீர்மானத்தினை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது.
  • குழந்தைகள் மற்றும் இளையோர்களுக்கான உலக நாடகத் தினமானது ஆண்டு தோறும் மார்ச் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பிரெஞ்சு மொழித் தினமானது 2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
    • இந்தத் தினமானது கலாச்சார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான முகமை உருவாக்கப் பட்ட தினத்தினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்