TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 28 , 2023 420 days 223 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ் வைத்தியநாதனை நியமித்து உள்ளார்.
    • தற்போதையத் தற்காலிகத் தலைமை நீதிபதியான டி ராஜா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப் பட்டுள்ளது.
  • சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு அரசு நிறுவனங்களுக்கும் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் இடையே ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராஞ்சியில் புதிய ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைத்தார்.
  • இந்தியா வானிலை முன்னறிவிப்பிற்காக 18 புதிய பெட்டா ஃப்ளாப் திறன் கொண்ட மீத்திறன் கணினிகளை அறிமுகப்படுத்த உள்ளது.
    • வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியம் மற்றும் உறுதித் தன்மையினை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இ-செவ்வனம் தளம் என்னும் ஒற்றைச் சாளர அமைப்பில் 900க்கும் மேற்பட்டச் சேவைகளை வழங்குவதன் மூலம்  கேரளா இந்தியாவின் முதல் முழு மின்-ஆளுமை கொண்ட மாநிலமாக மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்