TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 22 , 2024 179 days 179 0
  • NH- 66 மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில், எஃகு உருக்கு கசடினைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய நெடுஞ்சாலைப் பகுதி சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆனது, சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் பாரத் ஸ்டேட் வங்கியை விஞ்சி நாட்டின் மிகவும் மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனமாக மாறியுள்ளது.
  • இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் 'அசாம் பைபவ்' எனப்படும் அசாமின் உயரியக் குடிமை விருதினைப் பெற உள்ளார்.
  • கிராண்ட்மாஸ்டர் R. பிரக்ஞானந்தா, விஸ்வநாதன் ஆனந்த் அவர்களை விஞ்சி இந்தியாவின் முன்னணி சதுரங்க வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்