TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 21 , 2024 5 hrs 0 min 22 0
  • சமீபத்தில் நீதிபதிகள் N. கோடீஸ்வர் சிங் மற்றும் R. மகாதேவன் ஆகியோரின் நியமனம் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையானது முழு வரம்பினை (34) எட்டியுள்ளது.
  • உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு வரலாற்று புனைக் கதைப் புதினமான ‘The Prisoner of Bhopal’ என்ற தலைப்பிலான தனது இரண்டாவது புத்தகத்தினை டிம் வாக்கர் வெளியிட்டுள்ளார்.
  • எழுதுபொருள் விற்பனை நிறுவனமான கேம்லின்-இன் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் சமீபத்தில் காலமானார்.
  • வடகிழக்குப் பிராந்தியத்தில் வேளாண் இணைப்பினை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் வடகிழக்கு பிராந்திய வேளாண் பொருட்களுக்கான இணைய இணைப்பு (NERACE) இணைய தளம் மற்றும் கைபேசி செயலி தொடங்கப்பட்டது.
  • வணிக நிலக்கரித் தொகுதி இணைய முறையிலான ஏலத்தின் கீழ் ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள மச்சகட்டா (திருத்தியமைக்கப்பட்ட) நிலக்கரித் தொகுதிக்கான வெற்றிகரமான ஏலதாரராக NLCIL உருவெடுத்துள்ளது.
  • பொறுப்பு மிக்க செயற்கை நுண்ணறிவு (RAI) பற்றிய அதன் வெளியீட்டின் தொடரில், நிதி ஆயோக் அமைப்பானது, "அனைவருக்குமான பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு: கட்டமைப்பினை ஏற்றுக் கொள்ளுதல் - முக அடையாள அங்கீகார தொழில் நுட்பத்தில் ஒரு பயன்பாட்டு அணுகுமுறை" என்ற தலைப்பிலான மூன்றாவது அறிக்கையினை வெளியிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்