TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 4 , 2024 37 days 87 0
  • மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் வாத்வான் துறைமுகத்திற்கு இந்திய  பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • சமீபத்தில் கோவாவில் இந்தியக் கடலோரக் காவல்படையினால் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட முதல் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான ‘சமுத்திர பிரதாப்’ இயக்கப் பட்டது.
  • இரண்டாவது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்களின் வட்டமேசை (ISMR) மாநாடு சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது.
  • அவசரநிலை மேலாண்மைத் துறையில் ஒத்துழைப்புக்கான ரஷ்ய-இந்தியக் கூட்டு ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது.
  • பெர்க்சையர் ஹாத்வே என்ற நிறுவனம் $1 டிரில்லியன் மதிப்பீட்டை எட்டியுள்ள ஒரு நிறுவனமாகவும் இந்த மைல்கல்லை எட்டிய முதல் தொழில்நுட்பம் சாராத அமெரிக்க நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
  • கூகுள் டீப் மைண்டின் இந்தியப் பிரிவு, மோர்னி (இந்தியாவுக்கான பல மாதிரிகளின் பிரதிநிதித்துவம்) என்ற இந்திய மொழி செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை உருவாக்க உள்ளது.
    • இது 125 இந்திய மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளை உள்ளடக்கிய மற்றும் அதற்குச் சமமான இந்திய செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்