TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 5 , 2025 18 days 148 0
  • நிதி தொழில்நுட்பத் தளங்களான மொபிக்விக் மற்றும் CRED ஆகியவை மத்திய வங்கியின் எண்ணிம நாணயத்தினை (CBDC) வழங்கச் செய்கின்ற முதலாவது வங்கி அல்லாத நிறுவனங்களாக உருவெடுத்து, தனது தளங்களில் பயனர்களுக்காக வேண்டி e-ரூபி எனும் பணக்கோப்பினை வெளியிட்டு உள்ளன.
  • பொது விவகாரங்களில் ஆற்றியப் பங்களிப்புகளுக்காகவும் உலகளாவியத் தளத்தில் இந்தியாவின் கௌரவத்தை மேம்படுத்தியதற்காகவும் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்கலூவுக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டு உள்ளது.
  • சுமார் 48,000 சதுர கிலோமீட்டர் பசிபிக் பெருங்கடல் பரப்பினை உள்ளடக்கிய பகுதியினை மார்ஷல் தீவுகள் (மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதி) அதன் முதலாவது தேசியக் கடல் சரணாலயத்தினை அறிவித்துள்ளன.
  • மத்திய ஜவுளித் துறை அமைச்சகமானது, கைத்தறி நெசவாளர்கள் E-Pehchaan இணைய தளத்தையும் மற்றும் கைத்தறி விருதுகளுக்கான ஒரு இயங்கலைத் தொகுதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்த ஒரு மூலக் காரணப் பகுப்பாய்வு (RCA) அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக தொழில்நுட்பக் குறைபாடுகளுக்கான (iSPOT) ஒரு ஒருங்கிணைந்த SEBI இணைய தளம் என்ற இணையதளம் அடிப்படையிலான ஒரு தளத்தினை SEBI அமைப்பு அறிமுகப் படுத்தி உள்ளது.
  • ஹைட்ரஜனைக் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டக் குழாய்களை உருவாக்கிய முதல் இந்திய நிறுவனமாக டாடா ஸ்டீல் நிறுவனம் மாறி உள்ளது என்ற ஒரு நிலைமையில் இந்தியாவின் மிக தூய்மையான எரிசக்தி முன்னெடுப்புகளில் மிகவும் முக்கியமான ஒரு படிநிலையைக் குறிக்கிறது.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் (MeitY) எண்ணிம இந்தியா பாஷினி பிரிவு (DIBD) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் வடகிழக்கு மாநிலமாக திரிபுரா மாறியுள்ளது.
  • ஜோஹோ கார்ப் நிறுவனத்தின் ஒரு இணை நிறுவனரான ஷைலேஷ் குமார் தேவே, அதன் புதிய குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக, ஸ்ரீதர் வேம்புவிற்குப் பதிலாக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமானது இந்திய நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, " Dharohar - Milestones in the Indian securities market- தரோஹர் - இந்தியப் பத்திரச் சந்தையில் புதிய மைல்கற்கள்" என்ற ஒரு எண்ணிம அறிவுக் களஞ்சியத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணியானது மலேசியாவில் (கோலாலம்பூர் நகரம்) நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 2025 ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிக் கோப்பையை வென்றது.
  • இந்தியக் கடற்படையானது, போர்க்களச் செயல்பாட்டுத் தயார்நிலை பயிற்சி (TROPEX-25) எனப்படுகின்ற மிகவும் பெரிய கடல்சார் பயிற்சியைச் சமீபத்தில் ஒரு கடற்படைத் தளமான கர்நாடகாவின் கார்வார் என்ற இடத்தில் நிறைவு செய்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்