TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 3 , 2018 2086 days 603 0
  • இந்தியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கிடையேயான குற்றவியல் விஷயங்கள் தொடர்பான பரஸ்பர சட்ட உதவிகள் மீதான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இந்தியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கிடையே குற்றம் தொடர்பான விசாரணை, வழக்குகள், தேடுதல், தடை செய்தல், பறிமுதல் செய்தல், வழக்கை நடத்துதல் மற்றும் குற்றம் சம்பந்தப்பட்டுள்ள பொருட்களைப் பறிமுதல் செய்தல் ஆகியவற்றில் ஒத்துழைப்பிற்கான ஒரு விரிவான செயல்திட்டத்தை இந்த ஒப்பந்தமானது அளிக்கும்.
  • மூத்த இந்திய காவற் பணி அதிகாரியான எஸ்.எஸ். தேஸ்வால் இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் (Indo-Tibetan Border Police - ITBP) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இப்பதவியில் இருப்பார். இப்பதவி வகித்த R.K. பச்நந்தா ஓய்வு பெற்றதையடுத்து இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழக முதலமைச்சர் இ-அடங்கல் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் நோக்கம் நிலத்தின் வளம் மற்றும் தண்ணீர் இருப்பு ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக அதிகாரிகளால் தயாரிக்கப்படும் அரசாங்கப் படிவங்களின் தயாரிப்பை எளிமைப்படுத்துவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்