TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 25 , 2018 2064 days 603 0
  • இந்தியாவின் முதலாவது திறன் மேம்பாட்டு பல்கலைக் கழகமான ஸ்ரீ விஸ்வகர்மா திறன் மேம்பாட்டு பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இப்பல்கலைக் கழகம் ஹரியானாவின் பால்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • புது தில்லியில் டாக்டர் இராஜேஷ் பட்டால் எழுதப்பட்ட “காஷ்மீர் வானொலி - அமைதி மற்றும் போர்க் காலங்களில்” என்ற புத்தகத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் வெளியிட்டார்.
    • இப்புத்தகம் ஸ்டெல்லர் வெளியீட்டாளரால் வெளியிடப்படுகிறது.
  • மாலத் தீவின் அமைச்சரவையானது 53 நாடுகள் உறுப்பினராக உள்ள காமன்வெல்த் அமைப்பில் மீண்டும் உறுப்பினராக இணைவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாலத் தீவு காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேறியது. இப்பரிந்துரையானது மாலத் தீவு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக தற்போது அனுப்பப்படவிருக்கிறது.
    • 2016 ஆம் ஆண்டு அக்டோபரில் மாலத்தீவின் அப்போதைய அதிபரான அப்துல்லா யாமீனின் ஆட்சியின் போது மாலத் தீவு காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்