TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 12 , 2018 2047 days 611 0
  • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 06 அன்று இந்தியக் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் (டில்லியில் பிறந்த) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி உள்ளார்.
    • கவுதம் கம்பீர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
  • சென்னை மாநகரில் உள்ள 1.5 இலட்சம் சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பதற்காக “சிசிடிவி சென்னை நகரம்” என்ற பிரத்தியேகமான கைபேசி செயலியை சென்னை நகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 15-வது இந்திய சுகாதார உச்சி மாநாடானது இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பினால் (Confederation of Indian industry - CII) ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த மாநாடானது “இந்திய சுகாதாரம் - மாறி வரும் முன்னுதாரணம்” என்ற கருத்துருவுடன் தில்லியில் நடத்தப் பட்டது.
  • நாகாலாந்தின் முதல்வர் நெய்பியு ரியோ கோஹுமாவில் அம்மாநிலத்தின் “சுற்றுலா காவல் துறையை” அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்மூலம், அருணாச்சலப் பிரதேசத்திற்கு அடுத்து சுற்றுலாத் துறைக்கென்றே தனிப்பட்ட காவல் துறையை உருவாக்கிய இரண்டாவது மாநிலமாக நாகாலாந்து உருவெடுத்துள்ளது.
  • எச்.ஐ.வி/எய்ட்ஸ் மீதான ஐக்கிய நாடுகளின் திட்டமானது (UNAIDS - United Nations Programme on HIV/AIDS) உலகளாவிய பதின்பருவத்தினரின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான சிறப்புத் தூதுவராக ருவாண்டாவின் முதல் குடிமகளான திருமதி ஜீனெட் காகமேவை நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்