TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 22 , 2019 1948 days 614 0
  • கஜகஸ்தானின் அதிபர் பதவியிலிருந்து வெளியேறும் நுர்சுல்தான் நசப்பேவ்வை கௌரவிப்பதற்காக அந்நாடு தனது தலைநகரான ஆஸ்தானா என்ற பெயரை நுர்சுல்தான் என்று மாற்றியுள்ளது.
  • “டைகர் உமன்” என்பது “சர்துல்சுந்தோரி” என்ற வங்காள வரலாற்று நாவலின் ஆங்கில பதிப்பாகும். சர்க்கஸ் மற்றும் அன்பு குறித்து இது விவாதிக்கிறது. இந்த தினத்தின் கதாநாயகி முதலாவது பெண் சர்க்கஸ் கலைஞர் ஆவார்.
    • “சர்துல்சுந்தோரி” என்ற நாவல் சிர்சோ பந்தோபாத்யாய் என்பவரால் எழுதப்பட்டது. இது அருணவா சின்ஹா என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.
  • குறைந்த செலவில் விமானச் சேவையை அளிக்கும் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் இந்தியாவின் முதலாவது விமான நிறுவனமாக சர்வதேச வான்வழிப் போக்குவரத்து மன்றத்தில் (International Air Transport Association - IATA) இணைந்துள்ளது.
  • இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் திட்ட பங்குரிமைகள் மீதான மூன்று நாள் மாநாடானது இந்திய எக்ஸிம் வங்கி மற்றும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மத்திய வணிக அமைச்சகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி பீகார் தினம் அனுசரிக்கப்படுகிறது. இத்தினமானது பீகார் மாநிலம் உருவாக்கப்பட்டதைக் குறிக்கிறது.
    • 1912 ஆம் ஆண்டில் வங்காள மாகாணத்திலிருந்து ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பீகார் மாநிலம் பிரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்