TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 9 , 2019 1778 days 622 0
  • தமிழ்நாட்டின் 14வது அரசு சட்டக் கல்லூரியை தேனியில் உள்ள உப்பார்பட்டியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.
  • தமிழ்நாட்டின் முதல் ஆதார் சேவா கேந்திராவானது சென்னையில் உள்ள கோயம்பேட்டில் செயல்பாட்டுக்கு வந்தது.
    • இது ஆதார் தொடர்பான சேவைகளை பொது மக்களுக்கு விரிவுபடுத்துவதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
  • பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்ட பின்னர், ஜம்மு-காஷ்மீர் முதலீட்டாளர் உச்சி மாநாடு- 2019இன் முதல் சிறிய அளவிலான சந்திப்பு லேவில் நடத்தப் பட்டது.
  • இந்திய ரயில்வேயில் இது போன்ற வகையில் முதன்முறையாக, ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் கட்டணம் செலுத்தி விளையாடும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
  • ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதானுக்குப் அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது இந்திய வீரராக ஜஸ்பிரீத் பும்ரா ஆகியுள்ளார்.
  • புதுடில்லியில் நடைபெற்ற தேசிய இளைஞர் உச்சி மாநாட்டை இந்திய குடியரசுத் தலைவர் துவங்கி வைத்தார். இது இளைஞர் விழிப்புணர்வு இயக்கம் எனும் அமைப்பால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்