நடப்புக் கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வைக் கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளில் மட்டும், தோல்வியுற்ற மாணவர்கள் "அதே வகுப்பில் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள்".
மத்திய சுகாதார நலத் துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் புது தில்லியில் உலக சுகாதார அமைப்பு - தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய அலுவலகத்தின் (Regional Office for South-East Asia - SEARO) 72வது அமர்வைத் தொடங்கி வைத்தார். அவர் இந்த அமர்வின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிராந்தியக் குழுக் கூட்டத்தை இந்தியா நடத்துவது இது 2வது முறையாகும்.
போலந்திலிருந்து ஒரு உயர் மட்டத் தூதுக் குழுவானது மகாராஷ்டிராவின் கோல்ஹாப்பூருக்குப் பயணம் மேற்கொண்டது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1943-1947 காலப் பகுதியில் கோல்ஹாப்பூருக்கு அருகில் உள்ள வாலிவேட் முகாமிற்கு 5,000 போலந்து அகதிகள் தஞ்சமடைந்தனர்.
வாலிவேடில் விரைவில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. குஜராத்தின் ஜாம்நகர் என்ற நகரமானது 5,000 போலந்து அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது.
முழுவதுமாக மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளால் ஆன உயர் தரம் கொண்ட ஹம்சபர் ரயில்களில் இருந்து நெகிழ்வு கட்டணத் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் நீக்கியுள்ளது.
ஹம்சபர் விரைவு ரயில்கள் முதன்முதலில் கோரக்பூர் மற்றும் ஆனந்த் விஹார் (புது தில்லி) ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 2016 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் மீண்டும் வென்றதன் மூலம் பங்கஜ் அத்வானி தனது உலகப் பட்டங்களை 22 ஆக உயர்த்தினார்.