காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஃபரூக் அப்துல்லா (81 வயது) கடுமையான ஜம்மு மற்றும் காஷ்மீரின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (1978) கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இது எந்தவொரு நபரையும் இரண்டு ஆண்டுகள் விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்க அதிகாரிகளுக்கு உதவுகின்றது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1000 அறிஞர்களுக்கு தனது 23 இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் முனைவர் படிப்பை வழங்குவதற்கான ஒரு முயற்சியை இந்தியா முறையாகத் தொடங்கியுள்ளது.
இது வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
சரக்கு மற்றும் சேவை வரியில் (Goods and Services Tax - GST) உள்ள முறைகேடுகளைச் சரிபார்க்க 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் GSTயில் புதிதாக இணையும் வணிகர்களுக்கு ஆதார் உறுதிப்படுத்துதலைக் கட்டாயமாக்க GST அமைப்பு முடிவு செய்துள்ளது. ஆதார் உறுதிப்படுத்துதலானது முன்பு விருப்பமானத் தேர்வாக இருந்தது.