மாநிலங்களவை உறுப்பினரும்மாத்ருபூமி வெளியீட்டுக் குழுமத்தின் தலைவரும் மற்றும் அதன் மேலாண் இயக்குநருமானஎம்.பி வீரேந்திர குமார் எழுதிய “இமயமலையின் நீண்ட நெடிய பயணம்” என்ற ஒரு புத்தகத்தை இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார்.
“இமயமலையின் நீண்ட நெடிய பயணம்” என்ற புத்தகமானது குமாரின் மலையாளப் புத்தகமான ஹைமாவதாப் - ஹுவிலியின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும். இது கேந்திர சாகித்ய அகாடமி மற்றும் கேரள சாகித்ய அகாடமி ஆகிய விருதுகளை வென்றுள்ளது.
குஜராத்தில் வத்நகரில் சிறுவனாக இருந்து புது தில்லியின் 7, லோக் கல்யாண் மார்க்கில் இந்தியாவின் 14வது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தைக் குறிப்பிடும் ஒரு சித்திரம் சார்ந்த புத்தகமான 'கொந்தளிப்பு & வெற்றி: மோடியின் ஆண்டுகள்' என்ற ஒரு புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது.
இந்தப் புத்தகம் ராகுல் அகர்வால் மற்றும் பாரதி எஸ் பிரதான் ஆகியோரால் எழுதப்பட்டது.
ரூ 1.8 லட்சம் வரை வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கக் கூடிய ஆயுஷ்மான் பாரத் அட்டையை வழங்க ஹரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா என்ற திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் ரூ 5 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சையைப் பெறலாம்.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் நடத்தப்பட்ட 10வது ஆசிய-பசிபிக் இளைஞர் விளையாட்டு இறகுப்பந்து போட்டியில் இந்திய அணி தனது ஆதிக்கத்தைச் செலுத்தி, சாம்பியன்ஷிப் போட்டியின் தங்கப் பதக்கத்தை வென்றது.
இறகுப் பந்து வீரர்களான பிரணவ் மற்றும் மேக்னா ஆகியோர் முறையே சிறுவர் மற்றும் சிறுமியருக்கான ஒற்றையர் பட்டங்களை வென்றெடுக்க ஒரு அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்தினர்.
பெய்ஜிங்கில் 2022 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான ஒலிம்பிக் சின்னமாக பிங் டுவென் டுவென் என்று அழைக்கப்படும் ஒரு மகிழ்ச்சிகர பாண்டா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஒலிம்பிக் சின்னமானது குளிர்கால விளையாட்டுகளுக்கான தூதராகப் பணியாற்ற இருக்கின்றது.