தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறையானது மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மற்றும் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி ஆகியவற்றுடன் முத்தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட இருக்கின்றது.
தமிழ்நாட்டில் தோண்டி எடுக்கப்பட்ட மற்றும் கீழடி, கோந்தகை மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய தளங்களில் இருந்து தோண்டி எடுக்கப்படும் மனித எலும்புகளில் டிஎன்ஏ ஆய்வை மேற்கொள்வதற்காக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் படுகின்றது.
பல்கேரியப் பொருளாதார நிபுணர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரத்திலிருந்து 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்தைக் கொண்டுள்ள உலகளாவிய கடன் வழங்கும் அமைப்பின் முதலாவது தலைவராக இவர் உருவெடுத்திருக்கின்றார்.