2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் 65வது பதிப்பானது கொல்கத்தாவில் நடத்தப்பட இருக்கின்றது.
இத்திருவிழாவின்போது பிஸ்லா பங்களா மாநாட்டு மையம் மற்றும் அறிவியல் நகரம் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.
பஞ்சாப் தேசிய வங்கியானது (Punjab National Bank - PNB) சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்காணிப்பதற்காகவும் தங்களின் பணியாளர்களுக்காக ஒரு தடுப்புக் கண்காணிப்புத் தளத்தைத் தொடங்கியுள்ளது.
இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது முன்னெடுப்பு இதுவாகும். இது “நேர்மை – வாழ்வின் ஒரு வழி” என்ற PNBயின் மையக் கருத்துருவை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.