TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 2 , 2019 1755 days 651 0
  • குஜராத்தில் உள்ள காந்தி நகரில் இந்திய விமானப் படையின் தென்மேற்கு விமானக் கட்டுப்பாட்டகத்தின் புதிய விமானப் படை அதிகாரியாக விமானப் படைத் தளபதி  எஸ் கே கோட்டியா பொறுப்பேற்றுள்ளார்.
    • இப்பதவியை வகித்த விமானப் படைத் தளபதியான எச் எஸ் அரோராவிற்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். விமானப் படைப் பணியாளர்களின் துணைத் தலைவராக எச் எஸ் அரோரா விமானப் படைத் தலைமையகத்திற்கு மாற்றப் பட்டுள்ளார்.
  • மொத்த தரப் புள்ளி சராசரியில் 9.95 மதிப்பெண் பெற்று கணினி அறிவியல் மற்றும் பொறியியல் உள்ளடங்கிய தொழில்நுட்பத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற கவிதா கோபால் என்பவர் இந்தியக் குடியரசுத் தலைவர் விருதை வென்ற மதராசின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் முதலாவது மாணவி என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
  • பல்வந்த் சிங் ராஜோனாவின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பியாந்த் சிங் என்பவர் படுகொலை செய்யப்பட்டதற்காக அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அவருக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.
    • பஞ்சாபில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை பெற்ற பியாந்த் சிங் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று சண்டிகரில் நடந்த குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்