சென்னையில் உள்ள “இன்ஃபினிட்டி பூங்கா” என்று அழைக்கப்படும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புப் பூங்காவைப் பராமரிப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியானது தமிழ்நாடு அரசிடமிருந்து பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
இந்தப் பூங்காவானது பொலிவுறு நகரங்கள் என்ற திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 2 ஆம் தேதியன்று முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 113வது பிறந்த நாளை நினைவுகூறும் வகையில், அரசியல் ஆய்வாளரான சந்தீப் சாஸ்திரி என்பவர் "லால் பகதூர் சாஸ்திரி: அரசியல் மற்றும் அதற்கு அப்பால்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
முதன்முறையாக, இந்தியாவின் முதலாவது தனியார் ரயிலான லக்னோ - டெல்லி தேஜாஸ் விரைவு ரயிலின் பயணத்தின் போது ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் பயணத்தின்போது ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதம் ஏற்பட்டால் ரூ 100 என்ற தொகையும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு இழப்பீடு ரூ 250 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.