இந்திய மகளிர் குத்துச் சண்டை அணியானது ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை 48 கிலோ பிரிவில் மஞ்சு ராணி பெற்ற வெள்ளிப் பதக்கம் உட்பட நான்கு பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
கென்யாவைச் சேர்ந்த எலியுட் கிப்கோஜ் என்பவர் ஆஸ்திரியாவின் வியன்னாவில் 1 மணி 59:40 நிமிடங்களில் INEOS 1:59 என்ற போட்டியை நிறைவு செய்ததன் மூலம் 2 மணி நேரத்திற்குள்ளான ஒரு மாரத்தான் போட்டியை ஓடி நிறைவு செய்த முதல் நபராக உருவெடுத்துள்ளார்.
சீனாவில் நடைபெற்ற 2019 WTA (Women Tennis Association - மகளிர் டென்னிஸ் சங்கம்) வுஹான் ஓபனின் 6வது பதிப்பில் பெலாரசைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ஆரினா சபாலெங்கா என்பவர் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், சீனாவின் வுஹானில் அடுத்தடுத்துப் பட்டங்களை வென்ற முதலாவது வீரர் என்ற பெருமையை ஆரினா பெற்றார்.