இந்த ஆண்டின் இறுதிக்குள் நெட்ஃபிக்ஸ் மற்றும் ஹாட் ஸ்டார் போன்ற முன்னணியில் உள்ள நேரடி காணொளி ஒளிபரப்புத் தளங்கள் ஆகியவற்றில் ஒளிபரப்பக் கூடாத காணொளிகளின் "எதிர்மறைப்" பட்டியலைத் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட இருக்கின்றது.
புதிய ஒளிபரப்புச் சேவைகள் ஆணையத்தின் வரிசையில் ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டு வர மத்திய அமைச்சகம் அந்த நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பாகிஸ்தானைத் தனது ‘சாம்பல் நிறப் பட்டியலில்’ வைக்க நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழு (Financial Action Task Force - FATF) முடிவு செய்துள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தல் மற்றும் பண மோசடிகளை முற்றிலுமாக அகற்ற கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு இஸ்லாமாபாத்தை இந்தக் குழு அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடக மாநில அரசால் அம்மாநில ஜனபதா நிறுவனத்தின் (Karnataka Janapada Academy - KJA) தலைவராக நியமிக்கப்பட்ட முதலாவது திருநங்கை ஜோகதி மஞ்சம்மா ஆவார். அவருடைய வயது 62 ஆகும்.
கன்னட நாட்டுப்புறவியலின் பாதுகாப்புக் கலைஞர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக KJA செயல்படுகின்றது.
“சக்கரங்கள் மீதான விளம்பரம்" என்ற ஒரு புதிய திட்டத்தின் கீழ் விளம்பர நடவடிக்கைகளுக்காக ரயில்களைப் பயன்படுத்த அனுமதிப்பதற்கு ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
சிறப்பு ரயில்கள் இந்த விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்பட இருக்கின்றன. பாலிவுட் திரைப்படமான “ஹவுஸ்ஃபுல் 4” குழுவானது இந்த வசதியை முதலில் பயன்படுத்திய ஒன்றாக மாறியது.
கார்கில் மாவட்டத்தின் லடாக்கில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புத்த மடத்தைப் “பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம்” என்று அறிவிக்க இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனமானது பொது மக்களிடமிருந்து கருத்துகளைக் கோரியுள்ளது.
கையெழுத்திடப்பட்ட ஒரு இரகசிய ஒப்பந்தத்தின் கீழ், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ள, பெய்ஜிங்கில் செயல்படும் ஒரு நிறுவனமானது தென் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சாலமன் தீவுகளின் ஒரு பகுதியான துலாகித் தீவை 75 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது.
உத்தி சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த துலாகித் தீவானது ஏற்கனவே பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இராணுவத் தலைமையகமாகச் செயல்பட்டு இருந்தது.