TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 13 , 2019 1713 days 712 0
  • அடுத்த கல்வியாண்டிலிருந்து அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
    • இந்தத் திட்டமானது அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கும் நீட்டிக்கப்பட இருக்கின்றது.
  • ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு உப்பு நீர் ஏரியான சாம்பார் ஏரியைச் சுற்றி சுமார் பத்து வகையிலான இனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இடம்பெயர்வுப் பறவைகள் இறந்துள்ளன.
  • சுரங்கத் துறை, உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்ததை விட இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தியானது (தொழில்துறை உற்பத்திக் குறியீடு) 4.3% சரிந்துள்ளது.
    • 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக தற்பொழுது மூன்று பெரிய துறைகளின் உற்பத்தியும்  குறைந்து, மிகக் குறைந்த மாதாந்திர வளர்ச்சியை உற்பத்திக் குறியீடு பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்