2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ''தீவிரவாதத்திற்கான நிதியைத் தடுத்தல்'' என்ற மாநாட்டின் அடுத்தப் பதிப்பை இந்தியா நடத்த இருக்கின்றது.
இது 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிதியியல் புலனாய்வுப் பிரிவுகளால் (Financial Intelligence Units - FIUs) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகள் கூட்டாக சேர்ந்து “தி எக்மாண்ட் குழுமம்” என்று அழைக்கப்படுகின்றது.
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் சமூகப் பிரிவான நாஸ்காம் அமைப்பு மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான எம்ஃபாஸிஸ் ஆகியவை 11வது நாஸ்காம் சமூகப் புத்தாக்க மன்ற (NASSCOM Social Innovation Forum - NSIF) விருதின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளன.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில், ராஞ்சியில் உள்ள சர்வதேச அரங்க வளாகத்தில் நடந்த தியோதர் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்தியா ‘பி’ அணியானது இந்தியா ‘சி’ அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
உலகளாவியப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கமாகக் கொண்ட இரண்டு நாள் நடைபெறும் விவாத அமர்வான பாரிஸ் அமைதி மன்றத்தின் இரண்டாவது பதிப்பானது பாரிஸில் நடைபெற்றது.
உலகக் கருணை (இரக்க) தினமானது நவம்பர் 13 அன்று அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச அனுசரிப்புத் தினமாகும்.
இது பல்வேறு நாடுகளின் கருணை சார்ந்த அரசு சாரா நிறுவனங்களின் கூட்டணியான “உலகக் கருணை இயக்கத்தால்” 1998 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.