ஐந்து நாட்கள் நடைபெறக் கூடிய “கால நிலைக்கு உகந்த வேளாண்மை மற்றும் உலகளாவிய உணவு & வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கான மண் & நீர் வள மேலாண்மை தொடர்பான சர்வதேச மாநாடானது” புது தில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் நடைபெற்றது.
இந்த மாநாடானது இந்திய மண் பாதுகாப்புச் சங்கத்தினால் கூட்டாக இணைந்து ஒருங்கிணைக்கப் படுகின்றது.
இந்தியக் கடலோர காவற் படையானது (Indian Coast Guard - ICG) கோவா கடற்கரையில் நடத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டின் பிராந்திய அளவிலான தேடல் மற்றும் மீட்புப் பட்டறை மற்றும் பயிற்சியின் (Regional Level Search and Rescue Workshop and Exercise 2019 - ReSAREX- 19) போது அதன் செயல்திறனையும் தயார் நிலையையும் சோதித்துப் பார்த்தது.
ICGயின் பங்கேற்பு: ICGயின் 5 கப்பல்கள், 2 சேடக் வானூர்திகள் ஆகியவை இந்தப் பட்டறைக்குப் பயன்படுத்தப்பட்டன.