TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 18 , 2019 1708 days 789 0
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் முதல் முறையாக, மாற்றுத்திறன் உள்ளவர்கள், குறிப்பாக காது கேளாதவர்கள், பேச முடியாதவர்கள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் போட்டியிட தமிழ்நாடு மாநில அரசு அனுமதிக்க இருக்கின்றது.
    • 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை நகர மாநகராட்சி சட்டம் மற்றும் தமிழ் நாடு மாவட்ட நகராட்சி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • ராமேஸ்வரத்தில் குரு நானக்கிற்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு இடம் ஒதுக்க உள்ளது.
    • குருத்வாரா குரு நானக் தாம் ராமேஸ்வரம் நகரில் அமைந்துள்ள ஒரு குருத்வாரா ஆகும்.
    • சுமார் 1511 ஆம் ஆண்டில் முதல் சீக்கிய குருவான குரு நானக் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்ததை நினைவுகூறும் வகையில் இது கட்டப்பட இருக்கின்றது.
  • பெருநகர ஆசியக் குடும்ப சேவைகள் அமைப்பு வழங்கிய ‘MAFS காந்தி நூற்றி ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவைச் சார்ந்த சிறப்புத்துவ’ விருதை தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஓ.பன்னர் செல்வம் பெற்றார்.
    • உலக தமிழ் மாநாட்டிற்கான வாழ்த்து கூட்டத்தில் அவருக்கு தங்க தமிழ் மகன் விருதும் வழங்கப்பட்டது.
  • 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷூட்டர் சிங்கி யாதவ் என்பவர் இந்தியாவின் 11வது நபராகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.  
    • ஆனால் கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற 14வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்