உலகளாவிய தாய்மார்களின் சர்வதேச மாநாட்டை இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் புது தில்லியில் தொடங்கி வைத்தார். “வாசுதேவ குடும்பகம் - குடும்ப அமைப்பு மற்றும் தாயின் பங்கு” என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
மணிப்பூரைச் சேர்ந்த முன்னாள் உலக மற்றும் ஆசிய குத்துச் சண்டை வீராங்கனையான எல் சரிதா தேவி புதிதாக அமைக்கப்பட்ட சர்வதேச குத்துச் சண்டை சங்கத்தின் (International Boxing Association’s - AIBA) தடகள ஆணையத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
ஆறு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில், ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரே பிரதிநிதி சரிதா தேவி ஆவார்.
கிம்பர்லி செயல்முறை அமைப்பின் தலைமை நாடாக உள்ள இந்தியா, கிம்பர்லி செயல்முறை சான்றளிப்புத் திட்டத்தின் (Kimberley Process Certification Scheme - KPCS) ஒரு முழுமையான அமர்வை புது தில்லியில் நடத்தியது.
“பிளவர்” என்பவரது அறிக்கையின் அடிப்படையில், ஐ.நா பொதுச் சபையானது "பிரச்சினைக்குரிய வைரங்களை" பிரதான வைரச் சந்தையில் நுழைவதைத் தடுப்பதற்காக 2003 ஆம் ஆண்டில் KPCS செயல்முறையை நிறுவியது.
650 கிலோமீட்டர் வரையுள்ள வரம்புள்ள, அணுசக்தி திறன் கொண்ட, நிலப் பரப்பிலிருந்து நிலப் பரப்பில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ஷஹீன் -1 என்ற ஏவுகணையைப் பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது பல இந்திய நகரங்களை தனது வரம்பிற்குள் கொண்டு வருகின்றது.