மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்தியப் பிரதேசத்தின் தேவாஸில் மத்திய இந்தியாவின் முதலாவது அவந்தி மிகப்பெரும் உணவுப் பூங்காவைத் திறந்து வைத்துள்ளார்.
தெலுங்கானா முதலமைச்சர் பிரகதி பவனில் “காலேஸ்வரம் திட்டம்: தெலுங்கானா பிரகதி ரதம்” (காலேஸ்வரம் திட்டம்: தெலுங்கானாவின் வளர்ச்சித் தேர்) என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகமானது ஸ்ரீதர் ராவ் தேஷ்பாண்டே என்பவரால் எழுதப்பட்டது.
கினியாவிற்கு ஒரு கடனுதவித் திட்டத்திற்கும் (LOC - Line of Credits)இரண்டு சூரிய ஒளித் திட்டங்களுக்கும் தேவையான உதவியை இந்தியா நீட்டித்துள்ளது.
இந்திய தேசியத் துப்பாக்கிச் சுடுதல் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளின் 63வது பதிப்பானது (துப்பாக்கிச் சுடுதல்) புது தில்லியில் நடத்தப் பட்டது.