உலக வடிவமைப்பு அமைப்பானது (WDO - World Design Organization) தனது புதிய உலகளாவியத் திட்டமான ‘உலக வடிவமைப்பு முன்மாதிரி’ என்ற ஒரு திட்டத்தை கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் தொடங்க இருக்கின்றது.
இது உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய நகரங்களில் முழுமையான முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதையும் அவற்றை நிலையானதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய மேம்பாட்டு வங்கியானது (New Development Bank - NDB) இந்தியாவின் தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதிக்கு (National Investment and Infrastructure Fund - NIIF) 100 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகமானது “ஸ்ட்ராண்ட்ஹூக்” எனப்படும் ஒரு மென்பொருள் வழுவிற்கு ஆண்ட்ராய்டு இயக்க முறைமையானது பாதிப்பிற்கு உள்ளாவது குறித்து மாநிலங்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நாட்டில் இணையவழிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக ‘இந்திய இணைய வழிக் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre - I4C)’ என்ற ஒரு திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
பார்ச்சூன் 500 என்ற பட்டியலில் இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனமானது அரசிற்குச் சொந்தமான இந்தியன் ஆயில் கழகத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
பார்ச்சூன் 500 பட்டியல் என்பது உலகில் உள்ள செல்வம் மிக்க நிறுவனங்களின் ஒரு வருடாந்திரத் தரவரிசையாகும்.
இந்திய - திபெத்திய எல்லைக் காவல் படையானது (Indo-Tibetan Border Police - ITBP) தனது வீரர்களுக்காக ஒரு பிரத்தியேக திருமண இணைய தளத்தைத் தொடங்கியுள்ளது.
மத்திய ஆயுதக் காவல் படைகளிடையே (Central Armed Police Forces - CAPF) முதன் முதலில் வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் நன்கு நிர்வகிக்கப்பட்ட ஒரு திருமண இணையதளம் இதுவேயாகும்.
புது தில்லியின் கன்னாட் என்ற இடத்தில் புகைக் கோபுரங்களை அமைக்கும் ஒரு சோதனைத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு மத்திய அரசு மற்றும் தில்லி அரசிற்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புகைக் கோபுரங்கள் என்பது காற்று சுத்திகரிப்பானாகச் செயல்படுவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு காற்று சுத்திகரிப்புக் கட்டமைப்பாகும்.