TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 19 , 2019 1677 days 725 0
  • தற்போது துணை இராணுவத் தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இந்தியாவின் அடுத்த ராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப் பட இருகின்றார்.
    • இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று ஓய்வு பெற இருக்கும் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத்திற்குப் பதிலாக இவர் பொறுப்பேற்க இருக்கின்றார்.
  • ஜம்மு காஷ்மீரில் போர்களின் போது பாதிக்கப்பட்ட பெண்களால் தைக்கப்பட்ட ‘காதி ரூமல்’ என்பதன் விற்பனையை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
    • ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே இதன் நோக்கமாகும்.
  • நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் 2022 ஆம் ஆண்டிற்குள் அகலப் பட்டை கொண்ட அலைவரிசை வசதியைப் பெறுவதற்காக (இணைய வசதி) தேசிய அகலப் பட்டை அலைவரிசைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
    • இந்தத் திட்டமானது நாடு முழுவதும் உள்ள 6,00,000 கிராமங்களுக்கு இணைய வசதியைக் கொண்டு வருவதற்காக ரூ. 7 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்