பூமியின் நிலப்பகுதியின் மீது அமைந்த ஆழமான பள்ளத்தாக்கானது கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள டென்மேன் பனிப் பாறையில் கண்டறியப் பட்டுள்ளது.
இந்தப் பள்ளத்தாக்கானது 100 கி.மீ நீளம் மற்றும் 20 கி.மீ அகலம் என்ற அளவில் அமைந்துள்ளது.
இந்திய வர்த்தக தொழில்துறைக் கூட்டமைப்பானது உலகளாவிய விளையாட்டுகள் உச்சி மாநாட்டின் 9வது பதிப்பான “டர்ஃப் 2019 & இந்தியா விளையாட்டு விருதுகள் 2019” என்பதனை தில்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
கான்பூரில் பிரதமர் தலைமையிலான தேசிய கங்கை ஆணையமானது, கங்கை டால்பின் உயிரினங்களைக் காப்பாற்றுவதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் வேண்டி முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் குறித்து விவாதித்தது.
6வது இந்திய - இந்தோனேசியக் கூட்டு ஆணையக் கூட்டமானது புது தில்லியில் நடத்தப் பட்டது.