இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் (Council of Scientific & Industrial Research - CSIR) மற்றும் பிரான்சின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் (National Centre for Scientific Research - CNRS) ஆகியவற்றிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமானது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கட்டமைப்பு ஒன்றை நிறுவுவதாகும்.
இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படை ஆகியவை “அப்ஹாரன்” என்ற பெரிய அளவிலான கடத்தல் தடுப்புப் பயிற்சி ஒன்றை கொச்சி துறைமுகத்தில் நடத்தின.
இந்தியாவில் பெரிய அளவிலான கடத்தல் தடுப்புப் பயிற்சி நடத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.