2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆனந்த் மஹிந்திரா என்பவர் மஹிந்திரா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் பதவி விலகலுக்குப் பிறகு இவர் அந்நிறுவனத்தின் நிர்வாகம் சாராத தலைவராக செயல்பட இருக்கின்றார். பவன் கோயங்கா என்பவர் மீண்டும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட இருக்கின்றார்.
சந்திரயான் 3 என்ற விண்வெளித் திட்டத்தின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஆவார். இந்த விண்கலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்ணில் செலுத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
கேரள அரசின் ‘சில்வர் லைன்’ என்ற ஒரு திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சகமானது தனது கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளது.
கேரள மாநிலத்தின் இரு முனைகளுக்கும் இடையே (532 கி.மீ. நீளம்) அரை அதிவேக ரயில்களை இயக்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.