TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 22 , 2019 1674 days 650 0
  • 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆனந்த் மஹிந்திரா என்பவர் மஹிந்திரா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
    • இந்தப் பதவி விலகலுக்குப் பிறகு இவர் அந்நிறுவனத்தின் நிர்வாகம் சாராத தலைவராக செயல்பட இருக்கின்றார். பவன் கோயங்கா என்பவர் மீண்டும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட இருக்கின்றார்.
  • சந்திரயான் 3 என்ற விண்வெளித் திட்டத்தின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஆவார். இந்த விண்கலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்ணில் செலுத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
  • கேரள அரசின் ‘சில்வர் லைன்’ என்ற ஒரு திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சகமானது தனது கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளது.
    • கேரள மாநிலத்தின் இரு முனைகளுக்கும் இடையே (532 கி.மீ. நீளம்) அரை அதிவேக ரயில்களை இயக்குவது இந்தத் திட்டத்தின்  நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்